உண்மை உள்ள தேவன்
வேதப்பகுதி :சங்கீதம் 128:1-6
கடந்த ஞாயிற்றுக்கிழமை எங்கள் ஐம்பது ஆண்டுகால திருமண வாழ்க்கையில் ஆண்டவரின் உண்மைக்காக தேவனை துதிக்க கடவுள் எங்களுக்குஉதவினார். அவருடைய கிருபை காலைதோறும் புதியவையாக இருந்ததாலும், அவருடைய இரக்கங்கள் முடிவில்லாமல் இருப்பதாலும் நாங்கள்நிர்மூலமாகவில்லை என்று உறுதியுடன் சொல்ல முடியும்.
எங்களுடைய ஐம்பது வருட திருமண வாழ்க்கை கடவுளின் உண்மைக்கு ஒரு சான்றாகும். கடந்த ஆண்டுகளை திரும்பிப் பார்க்கும்போது, கடவுளின் கரம்எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் எங்களை நிலைநிறுத்திதையும், வழிநடத்திவந்ததையும், பாதுகாத்ததையும், தேவைகளை சந்தித்ததையும் தெளிவாகக்காண்கிறேன். கடவுள் எங்களுக்கு இரண்டு மகன்களையும் அவர்களுக்கு மனைவிகளையும் மூன்று பேத்திகளையும் கொடுத்து ஆசீர்வதித்தார், அவர்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் நாங்கள் என்றென்றும் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
ஒரு நீடித்த திருமணத்தின் ரகசியம் பிரச்சினைகள் இல்லாத வாழ்கை அல்ல. பிரச்சினைகளின் மத்தியில் கடவுள் இருப்பது தான் சான்றாகும். துக்கம், ஏமாற்றம், தவறான புரிதல் மற்றும் கண்ணீர் ஆகிய சூழ்நிலைகளை நாங்கள் கடந்து வந்துள்ளோம். நோய், பணக்கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய கவலைமற்றும் தனியாக சுமக்க முடியாத கனமான சுமைகளையும் நாங்கள் கடந்து வந்திருக்கிறோம். ஆனாலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் கடவுள்உண்மையுள்ளவராக இருந்தார். சகித்துக் கொள்ளவும், தியாகம் செய்யவும், மன்னிக்கவும், வாழ்க்கை கடினமாகிவிட்டாலும் தொடர்ந்து நேசிக்கவும் கடவுள்எங்களுக்குத் கிருபையாகக் கற்றுக்கொடுத்தார். கடவுளின் உண்மைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
முப்புரிநூல் சீக்கிரமாக அராது என்று வேதம் கூறுகிறது (பிரசங்கி 4:12) எங்கள் வாழ்க்கை அதற்கு ஒரு உண்மையான சான்றாகும். எங்கள் திருமணவாழ்க்கையில் கிறிஸ்துவுடன், வாழ்க்கையின் புயல்களை சமாளிக்க முடிந்தது. எங்களில் பலவீனங்களும் குறைபாடுகளும் இருந்தபோதிலும் கர்த்தர்உண்மையுள்ளவராக இருந்தார். யாரும் பூரணமானவர்கள் அல்ல, எனவே பூரணமான திருமணம் என்பது இல்லை. ஒவ்வொரு திருமணமும் கடவுளின்பராமரிக்கும் கரத்தின் சாட்சியாக உள்ளது. ஒரு வருடமோ அல்லது ஐம்பது ஆண்டுகளோ, திருமணம் என்பது கடவுளுடன் பண்ணின ஒரு உடன்படிக்கைஎன்பதை நாம் நினைவில் கொண்டு, தினமும் அவருடன் நடக்க வேண்டும்.
என் நண்பரே, உங்கள் பயணம் இப்போதுதான் தொடங்கியிருந்தாலும் சரி அல்லது நீங்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக நடந்து வந்திருந்தாலும் சரி. கடவுள்உண்மையுள்ளவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒன்றாக வாழ இரு தரப்பிலிருந்தும் பெரிய ஒத்துப்போதல் தேவை. இது எளிதானது அல்ல, ஆனால், கடவுளுக்கு எல்லாம் முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடவுளின் உதவியுடன் இந்த நாளிலும் நீங்கள் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கமுடியும். நம்முடைய கடவுள் இரண்டாம் தருணங்களின் தேவன்! நேற்று உங்களை வழிநடத்திய அதே ஆண்டவர் இன்று உங்களை பராமரிப்பார், நாளைஉங்களை கருணையுடன் ஆதரிப்பார். வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவரை நம்புங்கள்.
ஜெபம்:- பரலோகத் தகப்பனே, பல ஆண்டுகளாக நீர் எங்களுக்குப் பாராட்டிய உண்மைக்கு நன்றி. மகிழ்ச்சிகள் மற்றும் துக்கங்கள், வெற்றிகள் மற்றும்தோல்விகள், செழுமை மற்றும் போராட்டத்தின் வழிகளிலேயும் எங்களை நிலைநிறுத்தியதற்கு நன்றி. கடைசி வரை அன்பு, தாழ்மை மற்றும் நன்றியுடன்தொடர்ந்து ஒன்றாக நடக்க எங்களுக்கு உதவுங்கள். ஆமென்!!!
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
