WhatsApp
WhatsApp

ஒநேசிபோர்

Mar 20, 2026 By Hephzibah Stephen

வேதபகுதி:  2 தீமோத்தேயு 1:13-18

 

நம் கவனம் பெரும்பாலும் வேதாகமத்தில் உள்ள பவுல், பேதுரு, மோசே போன்ற மாபெரும் தலைவர்களிடம் ஈர்க்கப்படுகிறது. ஆயினும் வேதாகமத்தின் பக்கங்களுக்குள் மறைக்கப்பட்டுள்ள அதிகம் அறியப்படாத நபர்கள், அவர்களின் அமைதியான விசுவாசம் அதே சக்தியுடன் நம்மிடம் பேசுகிறது.  இந்த சாதாரணமான மக்கள்  அவர்களின் வாழ்க்கை இன்று நமக்கு ஆழமான பாடங்களைக் சொல்லிக் கொடுக்கின்றன. அத்தகைய ஒரு நபர் ஒநேசிபோர் 

 

தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில் பவுல் எழுதியதில் மட்டுமே குறிப்பிடப்பட்ட ஒரு மனிதர், ஆனால் அவரது விசுவாசம், தைரியம் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஊழியத்திற்காக நினைவுகூரப்படுகிறார். கடவுளின் ராஜ்யத்தில் உண்மையான விசுவாசமே முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது.

 

ஒநேசிபோரை பற்றி நான் படித்தபோது, ரோமாபுரியில் பவுலைத் தேடுவதற்கான அவர் எடுத்த அவரது அர்ப்பணிப்பு என்னை ஈர்த்தது. அவர் எபேசுவைச் சேர்ந்தவர். பவுல் மீண்டும் ரோமாபுரியில் சிறையில் அடைக்கப்பட்டதாக எபேசிய திருச்சபையில் கேள்விப்பட்டிருக்க வேண்டும். எனவே அவர் ரோமாபுரிக்கு நீண்ட பயணத்தை மேற்கொண்டார், பல சிறைகளில் பவுலை ஆர்வத்துடன் தேடினார், அவரைக் கண்டுபிடித்தார்! பவுல் அவரை ஆசீர்வதித்ததில் ஆச்சரியமில்லை, " ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங் கட்டளையிடுவாராக" என்றும் “அந்நாளில் கர்த்தரிடமிருந்து இரக்கம் பெருவாராக" என்றும் கூறினார். 

 

ஒநேசிபோரை குறித்து பல விஷயங்களை பவுல் விவரித்தார்.  அவர் பவுலுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருந்தார், மற்றவர்களுக்காக அதிகமாக பாடுபட்ட பவுலுக்கு அவர் புத்துணர்ச்சி அளித்தார்.  பவுல் சிறையில் இருந்தபோது ஒநேசிபோர் அவருக்கு ஒரு உண்மையான நண்பராக தன்னை நிரூபித்தார். மிகவும் கடினமான நேரத்தில் அவர் பவுலுக்கு ஊக்கத்தையும் பலத்தையும் கொடுத்தார்.  பயணம் கடினமாக இருந்தபோது பவுலைக் கைவிட்ட பிகெல்லு, எர்மோகெனேஸை விட ஒநேசிபோர் ஒரு வித்தியாசமான மனிதராக இருந்தார்.

 

ஒநேசிபோர் என்றால் "உதவி கொண்டு வருபவர்" என்று பொருள்படும், அவர் தனது பெயருக்கு ஏற்ப வாழ்ந்தார் என்பதில் சந்தேகமில்லை.  ஒநேசிப்போரின் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

 

ஊழியம் என்பது பிரசங்கம் செய்வது, வேத பாடம் கற்பிப்பது அல்லது மற்றவர்களை நல்வழி படுத்துவது மட்டுமல்ல. மற்றவர்களை புத்துணர்ச்சியூட்டுவதாகவும் இருக்க வேண்டும்.  நல்ல ஆலோசனையுடன் மட்டுமல்லாமல் நடைமுறை ஆதரவுடனும், அவர்களின் போராட்டங்களுக்கு மத்தியில் மக்களை ஊக்குவிப்பதாகவும், இரக்கமுள்ள செயல்களைக் காண்பிப்பதாகவும் இருக்க வேண்டும்.  சில நேரங்களில், சோர்வடைந்த ஆன்மாவை அன்புடனும் அக்கறையுடனும் உயிர்ப்பிப்தே மிகப் பெரிய ஊழியம் ஆகும்.  ஒநேசிபோரைப் பற்றி பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, "எபேசுவிலே அவர் எத்தனை வழிகளில் எனக்கு ஊழியம் செய்தார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்" என்று கூறுகிறார். (2 தீமோத்தேயு 1:18) அவரது சேவை ஒரு முறை மட்டும் செய்யப்பட்ட செயல் அல்ல.  இது எபேசுவிலும் இப்போது ரோமாபுரியிலும் அவரது வாழ்க்கையின் செயலாக இருந்தது.

 

என் நண்பரே!  பவுல் ஒரு குற்றவாளியாகப் சிறையில் அடைக்கப்பட்டார். பல விசுவாசிகள் ரோமானியர்களுக்கு பயப்பட்டதனாலோ அல்லது சங்கடப்பட்டதனாலோ அவரைத் தவிர்த்திருக்க வேண்டும், ஆனால் ஒநேசிபோர் அவ்வாறு செய்யவில்லை. உண்மையான சீடருக்கு கிறிஸ்துவுக்கான தைரியமும்  விசுவாசமும் தேவைப்படுகிறது, அது விலை உயர்ந்ததாக இருந்தாலும்  அல்லது சாதாரணமாக இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ளவர்களை நிலைநிறுத்தி, தேடி, பலப்படுத்தும் ஒநேசிபோரை போல நாம் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.

 

 

ஜெபம்:-  கர்த்தராகிய இயேசுவே, அன்பில் மற்றவர்களைப் பின்தொடரவும் தொடர்ந்து அவர்களுக்கு உதவவும் எனக்குக் கிருபை தாருங்கள்.  பயமில்லாமல் உமக்கு ஊழியம் செய்ய எனக்கு உதவுங்கள். ஆமென்.

 


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *